ADVERTISEMENT

இலங்கை கடற்படையின் கப்பல் மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு...!

12:30 PM Jan 18, 2019 | nagendran

ADVERTISEMENT

கோப்புப் படம்

ADVERTISEMENT


இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற முனியசாமி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையின் ராட்சத ரோந்து கப்பல் மோதி நடுக்கடலில் படகு மூழ்கி உயிரிழந்தார்.


அவரது உடல் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் இன்று காலை 9 மணியளவில் விமானம் முலம் திருச்சி வந்தது. அவரின் உடலுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.


பின்னர் அவரின் உடல் மீனவரின் சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை அருகே உள்ள இலந்தை கூட்டம் கிராமத்தில் உள்ள அவரது உறவினர்களிடம் இன்று மதியம் 2 மணியளவில் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT