ADVERTISEMENT

குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு.. 3 குழந்தைகள் உயிரிழப்பு.. 

03:21 PM Oct 06, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த திருமுருகன் பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் தங்கி பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை அனைவருக்கும் உணவு தரப்பட்டுள்ளது. கெட்டுப்போன உணவை உண்ட சிறிது நேரத்தில் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் 10 முதல் 13 வயது வரை உள்ள மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். உணவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட 6 குழந்தைகள் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள குழந்தைகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, “இப்பொதைக்கு எங்களுக்கு வந்த தகவலின் படி குழந்தைகள் வாந்தி எடுத்தவுடனே அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து விட்டதாக தெரிகிறது. 3 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணை முடிந்ததும் தவறு செய்தவர்கள் மேல் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்பே உயிரிழப்புகளுக்கான காரணம் தெரியவரும். அரசு மருத்துவமனைகளில் இருந்து சோதனைகளுக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. இரவு குழந்தைகளுக்கு சாதம் கொடுத்ததாக கூறுகின்றனர். சோதனை முடிவுகளில் அனைத்தும் தெரிந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT