ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இந்நிலையில், நேற்று திருச்சியில், தென்னிந்திய திருச்சபையினர்(CSI) சார்பில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை சந்தித்து பேசினர்.
திருச்சி பிஷப் சந்திரசேகரன் மற்றும் செயலர்கள், சுதர்சன், ஸ்டான்லி மதிசெல்வன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
ADVERTISEMENT
Show comments