ADVERTISEMENT

"இதுவரை தமிழ்நாட்டில் 4.12 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது"- ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி!

06:58 PM Sep 19, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், "தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இதுவரை 1 கோடி பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 19 நாட்களில் ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 4.12 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT