டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நவம்பர் 26 ஆம் தேதி துவங்கிய விவசாயிகள் போராட்டம் இன்றளவும் முடிவின்றி நடைபெற்றுவருகிறது.
ADVERTISEMENT
இதுவரை சுமார் 70 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு விவசாய சங்கங்களும், தொழிலாளர் அமைப்புகளும் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தி வருகின்றன.
ADVERTISEMENT
இன்று, (18.01.2020) வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற போது சின்னமலை, ராஜிவ்காந்தி சிலை அருகே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
Show comments