ADVERTISEMENT

மனைவிக்கு போனில் பாலியல் குறுஞ்செய்தி... மர்ம நபரை கட்டிவைத்து வெளுத்த ஊர்மக்கள்!!

08:41 PM Jun 08, 2019 | kalaimohan

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலை அடுத்த தளவாய்புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது மனைவிக்கு துணிக்கடையுடன் கூடிய டெய்லரிங் கடை ஒன்றை ஒரு மாதத்திற்கு முன்பு வைத்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக சுப்பிரமணியனின் மனைவிக்கு செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக குறுஞ்செய்திகள் மற்றும் ஆபாசமாக பேசுவது போன்று தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்துள்ளான். ஒரு கட்டத்தில் இதுகுறித்து சுப்பிரமணியனிடம் மனைவி சொல்ல சுப்பிரமணியன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆனால் காவல்துறையோ இதனை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டனர். இதுகுறித்த வழக்கை சைபர் குற்றப்பிரிவு போலீசார்தான் விசாரிக்க முடியும் என்று கிடப்பில் போட்டுவிட்டனர். ஆனால் குற்றம்சாட்டப்பட்ட அந்த மர்ம நபர் தொடர்ந்து சுப்பிரமணியன் மனைவிக்கு தொலைபேசியில் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால் ஒரு கட்டத்தில் தாங்க முடியாத அவரது மனைவி துணிக்கடை மற்றும் டெய்லரிங் ஷாப்பை மூடும் நிலைக்கு சென்று விட்டார்.

இதையடுத்து தனது மனைவியை அந்த நபரிடம் பேச வைத்து நைஸாக நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் சுப்பிரமணியன். ஜீன்ஸ் பேண்ட், மடித்துவிட்ட புல் ஹாண்ட் ஷர்ட், தலையில் கலர் பிளீச்சிங் என ஸ்டைலாக வந்து நின்ற அந்த மர்ம நபர் சுப்பிரமணியன் கையில் சிக்க அங்கு கூடியிருந்த பொதுமக்கள், சுப்ரமணியனின் நண்பர்கள் என அனைவரும் போட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்.

.

போலீசுக்கு தகவல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு போலீசார் வராததால் செல்போனில் தீராத தொல்லை தந்த அந்த காதல் ரோமியோவை சாலையில் வருவோர் போவோரிடம் விஷயத்தைச் சொல்லி அவனை மின்கம்பத்தில் கட்டிவைத்து சட்டையை கழட்ட வைத்து அரை நிர்வாணமாக அடித்தனர். அதன் பிறகு தாமதமாக வந்த போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டனர். பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் ஈசன்தங்கு பகுதியைச் சேர்ந்த ராம்பிரபு என்பதும், கடந்த 10 தினங்களுக்கு முன்பு துணிக்கடைக்கு வந்து அங்குள்ள பெண்களிடம் ஆபாசமாக பேசியதால் விரட்டப்பட்ட மர்ம நபர் என்பதும் தெரியவந்தது.

சுப்பிரமணியன் மனைவியை கண்காணித்து அவர் எப்போது கடைக்கு வருகிறார், வீட்டுக்கு எப்போது செல்கிறார் கடையில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் கண்காணித்த ராம்பிரபு கடையில் முகப்பு போர்டில் இருந்த செல்போன் நம்பரை எடுத்து சுப்பிரமணியனின் மனைவிக்கு இதுபோன்று ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த இடத்திலேயே விசாரணையில் ஈடுபட்ட போலீசார் பின்பு அவனை பத்திரமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT