ADVERTISEMENT
ADVERTISEMENT
சுகாதாரமற்ற முறையில் உணவுத் தயாரித்ததாகக் கூறி, பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவுப் பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.
மதுரை மாவட்டம், சாத்தமங்கலம் ஆவின் பால்பண்ணை சந்திப்பு சாலையோரத்தில் அமைந்துள்ள 'மதுரை பன் புரோட்டா' என்ற பெயர் கொண்ட கடையில் சுகாதாரமற்ற முறையில் உணவுத் தயாரிப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கடைக்கு நேரில் சென்ற உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அங்கு அதிரடியாக ஆய்வு செய்ததுடன், சோதனையும் மேற்கொண்டனர்.
இதில், சுகாதாரமற்ற முறையில் உணவுத் தயாரிப்பது உறுதியானதால், அந்த கடைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ADVERTISEMENT
Show comments