ADVERTISEMENT

இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு

06:54 AM Feb 01, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT


தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. ஞாயிறு பொதுமுடக்கம், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, இரவு நேர ஊரடங்கு, கோயில்களை விடுமுறை நாட்களில் மூடுவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்திருந்த நிலையில், கரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு மேற்கூறிய அனைத்து கட்டுப்பாடுகளும் சில நாட்களுக்கு முன்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விரைவில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததால், இதுதொடர்பாக தமிழக அரசு கடந்த வாரம் மருத்துவர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொண்டது. இதில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் இன்று முதல் பள்ளிக்கு வர இருக்கிறார்கள். கிட்டதட்ட 40 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT