விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசம்பட்டு அரசு பள்ளியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அரளிவிதை சாப்பிட்டு தற்கொலை முயன்றதாக கூறப்படுகிறது. 5 மாணவிகளும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ADVERTISEMENT
ஐந்து பேரையும் காதலிப்பதாக மாணவன் ஒருவன் கடிதம் எழுதி வைத்திருந்ததால், சக மாணவிகள் கிண்டல் செய்தார்களாம். இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
ADVERTISEMENT
மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பள்ளியிலும், அக்கிராமத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Show comments