ADVERTISEMENT

சாத்தான்குளம் வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைப்பு!!

08:11 PM Jul 10, 2020 | kalaimohan

ADVERTISEMENT

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிசிஐடி போலீசாரால் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இன்று முதல் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ தொடங்க உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

ADVERTISEMENT

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடிக்கு வருகை புரிந்துள்ளனர். சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு தொடர்பாக விசாரிக்க, டெல்லியில் இருந்து சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில், எட்டு பேர் கொண்ட குழுவினர் வருகை புரிந்துள்ளனர். டெல்லியிருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள் மூன்று கார்களில் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் வந்தடைந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி விசாரணை அதிகாரி அனில்குமார் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT