ADVERTISEMENT

"சசிகலா கூறுவது நகைப்புக்குரியது" - ஜெயக்குமார்

05:27 PM Jul 20, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அதிமுக முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனை சென்று நலன் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் திடீர் திருப்பமாக இன்று காலை ஜெயலலிதா தோழி சசிகலா மதுசூதனனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவரை சந்திக்கச் சென்ற காரில் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார், " அதிமுகவுக்கு உரிமை கொண்டாட சசிகலாவுக்கு எந்த உரிமையையும் இல்லை. அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக் கூட சசிகலா இல்லாத நிலையில், அவர் அதிமுக கொடியை எதற்காகப் பயன்படுத்த வேண்டும். அதிமுக என்பது தனது குடும்பம் என்று சசிகலா கூறுவது நகைப்புக்குரியது" என்று தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT