ADVERTISEMENT

ஒரே நேரத்தில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் கூடாது!! -துணை சபாநாயகர் தம்பிதுரை

04:42 PM Jul 07, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படுவது குறித்து தேசிய சட்ட ஆணையம் இன்று நடத்திய கருத்துகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு அந்த தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் செய்தியாளர்களை சந்திதார்.

அப்போது பேசுகையில், ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதில் அதிமுகவிற்கு உடன்பாடு இல்லை. அப்படியே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் ஆட்சேபனை இல்லை என்றாலும் அடுத்த தேர்தல் நடக்கவிருக்கும் 2019-ஆம் தேர்தல் முடிந்த பிறகு 2024-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் ஒருவேளை தேவைப்பட்டால் அனைத்து கட்சிகளும் ஆதரித்து ஏற்றுக்கொண்டால் இரண்டு தேர்தலையும் ஒன்றாக நடந்தலாம்.

நாங்கள் அந்த கருத்து கூட்டத்தில் வலியுறுத்தியது 2014-ல் எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும். கட்சிகள் மட்டுமல்ல மக்களிடமும் இதுபற்றி கருத்து கேட்க வேண்டும். அதற்கு பிறகும் இதை பற்றி சிந்தித்தால் அதை பற்றி யோசித்து சொல்கிறோம் என கூறியுள்ளோம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT