ADVERTISEMENT

எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது

03:33 PM Dec 18, 2019 | kalaimohan

கோவில்பட்டி தாலுகா உருளைப்பட்டி எனும் கிராமத்தை சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மராஜ் எனும் தர்மனுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான சோ.தர்மன். ஈரம், தூர்வை, சோகவனம் என 7 புத்தகங்களை எழுதியிருக்கிறார். சூல் என்ற நாவலுக்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடெமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் கூறுகையில், சாகித்ய அகாடெமி விருது பெற்றது மகிழ்ச்சியை தருகிறது. நான் நடிகன் அல்ல, நான் ஒரு எழுத்தாளர். நான் சூரியகாந்தி போல் அல்லாமல் மூலிகை போல் இருப்பேன். எந்தவித விளம்பரமும் இல்லாமல் பணியாற்றி வருகிறேன் அங்கீகாரமும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது என மகிழ்ச்சி தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT