Skip to main content

கோஷ்டி உருவாக்காத எழுத்தாளர், வெறுப்பை பரப்பாத பேச்சாளர்... - சாகித்ய அகாடெமி விருது பெற்ற எஸ்.ரா

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
s.r

 

 

“என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்” என்றுதான் எஸ்.ரா தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார். நம் கோணத்தில் இருந்து பார்த்தாலும் இது உண்மைதான்... எஸ்.ரா எழுத்தில் உருவான நூல்களை படிக்கும்போது, அவருடைய உலகமான அவரது சிந்தனைக்குள் எழுத்துகள் எறும்புகளாகி அவரது உலகினுள் நம்மை அழைத்துச் செல்வதை உணரலாம். முடிந்தவரை தன்னை படிப்பவர்களுக்கு பாசிடிவிட்டியை பரப்புபவர் இந்த எஸ். ராமகிருஷ்ணன். 
 

எஸ். ராமகிருஷ்ணன், விரிந்திருக்கும் பொட்டல் நிலத்தில் இசையுடன் அலைந்து திரியும் நாதஸ்வர கலைஞர்களை பற்றி எழுதிய சஞ்சாரம் என்னும் நாவலுக்காக இந்தாண்டின் சாகித்ய அகாடமி விருதை பெறுகிறார். இந்திய எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த விருதை பெற வேண்டும் என்கிற ஆசை கண்டிப்பாக இருக்கும். இந்தியாவில் எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்படும் விருதுகளில் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதை பெற்றது குறித்து எஸ்.ரா,  ‘இந்த விருது எனக்கு ஒரு புத்துணர்ச்சியை தருகிறது. மீண்டும் எழுத்துலகில் ஓடவேண்டும் என்று தோன்ற வைக்கிறது. 25 வருடமாக எழுத்து பணியில் இருப்பவருக்கு, ஒரு சிறந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
 

எஸ். ராமகிருஷ்ணன் என்பது இவருடைய பெயராக இருந்தாலும் பலரால் எஸ்.ரா என்றே அழைக்கப்படுகிறார். இவர் தமிழ் எழுத்துலகில் முதன் முதலாக சிறு கதைகள் மூலம் எழுத தொடங்கி, பிறகு தமிழ் நவீன எழுத்துலகில் தவிர்க்கமுடியாத எழுத்தாளராகியுள்ளார். சிறுகதை, நாவல் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பயணம் செய்து பல பயணக் கட்டுரைகள் எழுத வல்லவர். பலருக்கு தன் எழுத்துகளின் மூலம் உலக சினிமா, உலக இலக்கியங்கள் பலவற்றை பற்றி அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
 

sancharam


கி.ராஜநாராயணன் மற்றும் கோணங்கி போன்ற தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பை சேர்ந்தவர் எஸ். ராமகிருஷ்ணன். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணர் கிராமம்தான் இவருடைய சொந்த ஊர், இக்கிராமம் முன்பு இராமநாதபுரம் . எஸ்.ராவின் தந்தை வழி தாத்தா திராவிட கொள்கையுடைவர், தாய் வழி தாத்தா தீவிர சைவ சமயத்தை பின்பற்றுபவர். சிறு வயதிலேயே கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்கிற சந்தேகம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பிறகு புத்தகங்கள் வாசிக்க அதிக ஆசை வந்துவிட்டதால் பல நூலகங்களில் உள்ள நூல்களை தேடி தேடி படிக்கும் பழக்கம் வந்திருக்கிறது. சிறு வயதில் இராமநாதபுரத்திலுள்ள அக்கம்பக்கம் கிராமத்தை சுற்றியே வளர்ந்ததால் என்னவோ, 18 வயதில் இருந்து மனம்போன போக்கிலேயே பல ஊர்களை சுற்றியிருக்கிறார். இலக்கிய வாசிப்புடன் இருந்தவர் தன்னுடைய கல்லூரி நாட்களில்தான் முதன் முதலாக எழுத தொடங்கியுள்ளார். எழுத்து பிரதியில் வெளியான முதல் கதை கபாடபுரம். அடுத்த கதை பழைய தண்டவாளம் கணையாழியில் வெளியானது.
 

 

 

ஆங்கில இலக்கியம் பயின்று அதில் முனைவர் பட்டம் வரை சென்று பாதியில் திரும்பி, தமிழ் எழுத தொடங்கியுள்ளார் எஸ்.ரா. 15 வருடம் சென்னையில் அழைந்து திரிந்திருக்கிறார். முழு நேர எழுத்தாளனாக இவர் மாற, இவருடைய குடும்ப சுமையை எஸ்.ராவின் மனைவி சுமந்தார். துணையெழுத்து தொடர் பரவலான வாசக கவனத்தை இவருக்கு அளித்தது. அதைத் தொடர்ந்து கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி என்று வெளியானவை தமிழில் பரந்த வாசக தளத்தினை உருவாக்கியது.
 

இவர் எழுத்தில் மட்டும் வல்லவரா என்று பார்த்தால் அதுதான் இல்லை, யூ ட்யூபில் இவருடைய பேச்சுக்களை பார்த்தோம் என்றால் அப்படியே நாம் மூழ்கி விடுவோம். உதாரணம், மார்க்ஸ் ஜென்னியின் காதல் பற்றி அவ்வளவு அருமையாக பேசியிருப்பார். அவர் எழுதத்தை படிப்பவர்களை, அந்த உலகத்துக்கு அழைத்து செல்வதை போன்று தன்னுடைய பேச்சிலும் அழைத்து செல்வார்.
 

பாபா திரப்படத்தின் மூலம் சினிமா எழுத்தாளனாகவும் கால் பதிக்க தொடங்கினார். சண்டக்கோழி படத்தில் இவருடைய வசனங்கள் பலரால் பாராட்டப்பெற்றது. இவர் 9 நாவல்கள், 21 சிறுகதை தொகுப்புகள், 3 நாடகங்கள் மற்றும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். சிறுகதைகள் ஆங்கிலம் ஜெர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதேபோல 14 திரப்படங்களில் வசனம் மற்றும் திரைக்கதைகளில் பங்காற்றியுள்ளார். கடந்த் ஆண்டு தேசாந்திரி என்னும் பப்ளிகேஷனையும் தொடங்கியுள்ளார். சாகித்ய அகாடமி விருதை சேர்ந்து 14 விருதுகள் தன்னுடைய எழுத்திற்காக பெற்றிருக்கிறார்.

 


 

Next Story

கலங்கி நிற்கும் குடும்பத்தினர்; பவதாரிணி உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி (படங்கள்)

Published on 26/01/2024 | Edited on 26/01/2024

 

பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரிணி.

இசைஞானி இளையராஜாவின் செல்ல மகளான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்கோலாறு ஏற்பட்டது. இது தொடர்பாக மருத்துமனைக்கு சென்றபோது அவருக்கு புற்றுநோய் வந்திருப்பதாகக் கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தார், அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென்று தீவிர முயற்சி எடுத்துள்ளனர். அதன்படி, இந்த நோய்க்கு இலங்கையில் சிறந்த மருத்துவம் அளிப்பதாகத் தெரிந்துள்ளது. இதனையடுத்து, பவதாரிணிக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் இலங்கை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் தேதி மாலை 5.20 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

விமான மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட பவதாரணியின் உடலானது அவரது இல்லம் உள்ள அமைந்துள்ள தி நகர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். பிரபலங்களும் அஞ்சலி செலுத்த அங்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்புப் பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அவரது உடலுக்கு பல்வேறு பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ராமராஜன், இயக்குநர் வெற்றிமாறன், சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், நடனக் கலைஞர் காயத்ரி ரகுராம், நடிகர் சிவகுமார், திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் கார்த்தி, விஷால்,விஜய் ஆண்டனி, நடிகர் ஆனந்தராஜ்,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகை ராதிகா, நடிகர் ஸ்ரீகாந்த்  உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Next Story

பாடகி பவதாரிணி காலமானார்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Singer Bhavadharani passed away

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.

இளையராஜாவின் மகள் பவதாரிணி (47) இலங்கையில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளையராஜா இசையமைத்த ராசய்யா திரைப்படத்தில் இடம்பெற்ற 'மஸ்தானா மஸ்தானா' பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து பாரதி படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடல் மூலம் பிரபலமானவர். அந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றவர். அதனைத் தொடர்ந்து தனது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் அப்பா இளையராஜா ஆகியோர் இசையில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். தனித்துவமான குரலில் பாடி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றவர். இது சங்கீத திருநாளோ, காற்றில் வரும் கீதமே, ஒளியிலே தெரிவது தேவதையா உள்ளிட்ட பாடல்கள் இவரது குரலில் வந்த ஹிட் பாடல்களாகும்.

பாடல்கள் மட்டுமல்லாது தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் உள்ளார் பவதாரிணி. இலங்கை சென்றிருந்தவர் அங்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் காலமானார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த துயர சம்பவம் தமிழ் திரையுலத்தினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரைத்துறையினர் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.