ADVERTISEMENT
ADVERTISEMENT
சிறையிலிருந்து பரோலில் வெளிவர ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் எளிதாக வர முடியும் என்ற ஆங்கில நாளிதழ் செய்தியை தானாக முன்வந்து வழக்காக எடுத்து மாநில மனித உரிமை ஆணையம்
இது தொடர்பாக தமிழக சிறைத்துறை கூடுதல் டிஜிபி விரிவான அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய ஆணைய உறுப்பினரான நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
நன்னடத்தையின் அடிப்படையில் கைதிகளுக்கு எத்தனை நாட்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது?? 2017 - 18ல் எத்தனை கைதிகள் பரோல் கேட்டுள்ளனர்?,பரோல் கொடுக்கவில்லை என எத்தனை புகார்கள் வந்துள்ளது? அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?,கைதிகளின் உரிமைகளை மீறும் வகையிலான சிறைத்துறையினரின் அஜாக்கிரதையான செயல்பாடு மனித உரிமை மீறல் ஆகாதா?? உள்ளிட்ட கேள்விகளை நீதிபதி எழுப்பியுள்ளார்.
ADVERTISEMENT
Show comments