Skip to main content

செந்தில்பாலாஜி மீது குட்கா வழக்கு போட துடிக்கும் காவல்துறை !

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

கரூர் மாவட்டத்தில் குட்கா விவகாரம் சில நாட்களுக்கு முன்பு முன்பு, நாமக்கல் மாவட்டம், கீழாம்பூர் சுங்கச்சாவடியில் போலீஸாரால் நடத்தப்பட்ட சோதனையில், பெங்களூருவில் இருந்து கரூருக்கு வந்த கன்டெய்னர் லாரியில், 3,563 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. அதன்படி, அந்த லாரி டிரைவர் பாலசுப்பிரமணியத்திடம் நடத்திய விசாரணையில், கரூர் சின்ன ஆண்டான்கோயில் எஸ்.கே.எஸ் காலனியைச் சேர்ந்த தங்கராஜ், ராயனூர் கே.கே.நகர் செல்வராஜ் ஆகியோரின் மளிகைக் கடைக்கு ஏற்றிச் செல்வதாகத் தெரியவந்தது. இதையடுத்து, கடந்த இரண்டு நாள்களாக கரூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரன் உத்தரவின் பெயரில், ராயனூர் மற்றும் வெள்ளக்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த இரண்டு குடோன்களில், 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 டன் மற்றும் 843 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்தனர்.

 

kutka case

 

குடோன்களை வாடகைக்கு எடுத்து மளிகைப் பொருள்களை இருப்பு வைப்பதாகக் கூறி, சட்டவிரோதமான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருள்களைப் பதுக்கியதாக கரூரைச் சேர்ந்த கொங்கு மணி என்கிற சுப்பிரமணியை போலீஸார் முதல் குற்றவாளியாக வழக்குப்பதிவுசெய்து தேடிவருகின்றனர்.

 

கொங்குமணி செந்தில்பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவர்.செந்தில்பாலாஜி சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த போது கொங்குமணியும் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைந்த கையோடு பிரமாண்டமான இணைப்பு விழா நடத்தி அசத்தினார். அத்தோடு விடாமல் அரவாக்குறிச்சியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடத்தி மாவட்ட செயலாளர் பொறுப்பையும் கிடைத்தது. செந்தில்பாலாஜியின் அரசியல் அதிரடியினால் அரண்டு போன அமைச்சர் விஜயபாஸ்கர் போலிஸ் துணையோடு குட்கா வழக்கில் தலைமறைவாக இருக்கும் முதல் குற்றவாளியான கொங்குமணி பிடித்து ஏதேனும் வாக்குமூலம் வாங்கி செந்தில்பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது என்கிற குற்றசாட்டு தி.மு.க. பக்கம் கேட்கிறது. கொங்குமணியோ உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கின பின்பு தான் வெளியே வருவது என்கிற முடிவோடு இருக்கிறார் என்கிறார்கள். கொங்குமணி தரப்பினர். 

சார்ந்த செய்திகள்

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.