ADVERTISEMENT

மேற்கூரை இடிந்து சிறுவன் உயிரிழப்பு... வாலாஜாபாத்தில் சோகம்!

08:09 PM Jul 29, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த அய்யம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் நெசவுத் தொழிலாளியான லோகநாதன். இவரது வீட்டில் திடீரென அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்த நேதாஜி என்ற 9 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அதேபோல் இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒன்பது வயது சிறுவன் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT