ADVERTISEMENT

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்!

06:43 PM Nov 11, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், மாநிலத்தில் மழை வெள்ள நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (11/11/2021) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜயந்த் இ.ஆ.ப., பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன் இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT