ADVERTISEMENT

உணவகத்தில் அரசு பேருந்துகளை நிறுத்த நிபந்தனைகள் வெளியீடு!

11:35 PM Mar 24, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகள் தங்களது உணவகத்தில் நிறுத்தம் செய்ய ஒரு வருடத்திற்கு உரிமம் வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் (இரண்டு உறை முறையில்) அதற்கான படிவத்தில் கோரப்படுகின்றன. ஒப்பந்தப்படிவம் 19/03/2022 முதல் 27/04/2022 வரை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்திச் செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி படிவம் 28/04/2022 அன்று மாலை 03.00 மணி வரை பெறப்பட்டு பின்னர் ஒப்பந்ததாரர் முன்னிலையில் 03.30 மணியளவில் திறக்கப்படும். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் ஒப்பந்தப்புள்ளி படிவத்திற்கு ரூபாய் 1,000- க்கான தொகையைக் கேட்பு வரைவோலையாக M.D. S.E.T.C. என்ற பெயரில் எடுத்து ஒப்பந்தப்புள்ளி படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். கேட்பு வரைவோலை இணைக்கப்படாத ஒப்பந்தப்புள்ளி படிவம் நிராகரிக்கப்படும்.

ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகள்:

உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும். உணவகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கும்படி, பராமரிக்க வேண்டும்.

பயணிகள் அருந்துவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கப்பட வேண்டும். கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். மேலும், பயணிகளுக்கு கழிவறையில் தண்ணீர் வசதி எப்பொழுதும் இருக்க வேண்டும். கழிவறையை கம்பரஷர் மூலம் தான் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். மேலும், பயோ கழிவறை இருக்க வேண்டும்.

உணவகத்தின் அமைப்பு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் நின்று செல்வதற்கு போதுமான இடவசதியுடன் இருக்க வேண்டும். மேலும் பேருந்து நிறுத்தம் செய்யும் இடம் கான்கிரீட் தளமாக (அல்லது) Pavar Block போட்டிருக்க வேண்டும். இவ்வாறு தமிழநாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT