ADVERTISEMENT
நாளை (14.02.2021) தமிழகம் வரும் பிரதமர் மோடி சென்னையில் நடக்க இருக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள ‘அர்ஜூன்’ எனப் பெயரிடப்பட்ட பீரங்கியை ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியிலும், வட சென்னை - விமான நிலையம் மெட்ரோ சேவையை துவங்கி வைக்கும் நிகழ்ச்சியிலும், சென்னை கடற்கரை - அத்திப்பட்டு ரயில் நிலையங்ளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள நான்காவது ரயில் தடத்தையும், மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதையைத் துவங்கும் நிகழ்ச்சி போன்ற திட்டங்களைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என பிரதமர் அலுவலகத்தின் வாயிலாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்காக நாளை அவர் கடந்து செல்லும் பாதையில் ஒத்திகை மற்றும் சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments