ADVERTISEMENT

குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த ரவீந்திரநாத் குமார் எம்.பி! (படங்கள்) 

10:06 AM Jul 29, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவரின் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்ட திரௌபதி முர்முவை அ.தி.மு.க. ரவீந்திரநாத் குமார் எம்.பி. நேரில் சந்தித்துப் பேசினார்.

ADVERTISEMENT

இது குறித்து அ.தி.மு.க. ரவீந்திரநாத் குமார் எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு, ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீரமங்கை இராணி வேலுநாச்சியாரின் திருவுருவப்படத்தை நினைவு பரிசாக வழங்கினேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT