இதை வேத வாக்காக எடுத்து கொண்ட ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ஆனந்த். ரூ.1 லட்சம் கட்டினால் மாதம் ரூ.8,000 வட்டி என கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தார். அதேபோல், தமக்கு சிபாரிசு செய்யும் நபர்களுக்கு ரூ.10,000 வட்டி என வலைவீசி பணத்தை வாரிச் சுருட்டி வருகிறார்.
"ஆரம்பத்தில் ஒரு சிலர் மட்டுமே ஆனந்திடம் பணம் கட்டிய நிலையில், இப்போது, நான் நீ என போட்டி போட்டு பணத்தை கட்டுகின்றனர். இதனால், ஆசிரியர் தொழிலை விட வட்டித் தொழிலில் அவர் அதிகம் கல்லா கட்டுகிறார். அவரிடம் பணம் கட்டும் 95 சதவீதம் பேர் நன்கு படித்த ஆசிரியர்கள். இது எங்கே போய் முடியுமோ?" என்று நம்மிடம் வேதனையை பகிர்ந்து கொண்டார் ராமநாதபுரத்தை சேர்ந்த நண்பர் ஒருவர்.
ஏழையா இருந்து நல்லவனா இருக்கறதுக்கும் பணக்காரனா இருந்து நல்லவனா இருக்கறதுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு. இதை ஆனந்த் மாதிரியான ஆட்கள்கிட்ட பணத்தை கட்டுகிற அப்பாவிகள் உணர்ந்தால் சரி.!