நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் பல இடங்களில் வன்முறையாகவும் முடிந்துள்ளது. இந்தநிலையில் சிஏஏ வுக்கு ஆதரவாக பாஜகவினர் பேரணி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
நேற்று புதுக்கோட்டையில் பேரணி நடத்த அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அறந்தாங்கியில் இருந்து புறப்பட்டவர்கள் பள்ளிவாசல் வழியாக செல்ல முயன்றபோது அந்த வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் டிஎஸ்பி பாலமுருகனுடன் வாக்குவாதம் செய்தனர்.
தொடர்ந்து புதுக்கோட்டையில் மாநில பொறுப்பாளர் நாகராஜன் தலைமையில் நடந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பொதுமக்களக்கு இடையூறாக கூட்டம் கூட்டியதாக நகர காவல் நிலையத்தில் பாஜகவினர் 700 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Show comments