ADVERTISEMENT

நதிகள் இணைப்பு பற்றி பேசும் ரஜினிகாந்த், காவிரி நீரை கொண்டுவர என்ன செய்தார்? சி.வி.சண்முகம் கேள்வி!

04:27 PM May 12, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT


நதிகள் இணைப்பை பற்றி பேசும் ரஜினிகாந்த் கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை கொண்டுவர என்ன செய்தார்? என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

நதிகள் இணைப்பு பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசினார். இதனை நான் வரவேற்கிறேன். தண்ணீர் பிரச்சனைக்கு, நதிகளை இணைப்பது தான் ஒரே வழி நிரந்திர தீர்வு என்கிறார். இவர் முதலில் நதிகளை இணைப்பது இருக்கட்டும். முதலில் தான் பிறந்து, வளர்ந்த தான் சொந்த மாநிலமான கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீரை பெற்றுத்தர என்ன வழி என்பதை கூறிவிட்டு, அதன்பின் நதிகள் இணைப்பு பற்றி பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT