ADVERTISEMENT

 ரஜினிக்கு நன்றி சொன்ன பியூஷ் கோயல்

10:19 PM Apr 12, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். அவர் இன்று சென்னைக்கு வந்தார். பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது அவர், நதிகள் இணைப்பே தண்ணீர் பிரச்சனைக்கு சரியான தீர்வாக இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் நதிகளை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பா.ஜ.க.வின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்த நடிகர் ரஜினிக்கு நன்றி. பிரதமர் மோடி தலைமையில் அடுத்து அமையும் அரசில், தமிழக பிரதிநிதிகளின் குரல் எதிரொலிக்கும். 2022-ம் ஆண்டில் மீனவர்களின் வருமானம் இரட்டிப்பாகும்’’என்று தெரிவித்தார்.

அவர் மேலும், நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை. நீட் தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது; அதை ஏற்றுக் கொண்டோம் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT