ADVERTISEMENT

கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு!

12:16 AM Mar 01, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT



தமிழக கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த புகாரானது சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார், சம்பவ நடந்த இடத்திற்கும் நேரில் சென்று விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஆறு பேர் கொண்ட விசாகா குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT