ADVERTISEMENT

4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...

09:50 AM Apr 20, 2019 | kamalkumar

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT


இன்று சில இடங்களில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், நாளை மறுநாள் முதல் 24ம் தேதி வரையிலும் தமிழ்நாட்டில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 12 செ.மீ., நாமக்கல்லில் 8 செ.மீ., கன்னியாகுமரி அருகேயுள்ள கோதையாறில் 7 செ.மீ. அளவில் மழை பதிவாக வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. அண்மையில் சில இடங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியிலுள்ளனர்.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT