ADVERTISEMENT

மீண்டும் மழை; தமிழகத்திற்கு 'ஆரஞ்சு அலர்ட்'

12:52 PM Dec 15, 2023 | kalaimohan

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

டிசம்பர் 15, 16 ஆகி தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இன்று விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, அரியலூர், தஞ்சாவூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு நாட்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 12 முதல் 20 சென்டி மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT