ADVERTISEMENT

வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் விடிய விடிய சோதனை! 4 லட்சம் பறிமுதல்!

11:57 AM Jul 25, 2018 | vasanthbalakrishnan

சென்னை வேளாண்மை ஆணையகரத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை 4 லட்சம் ரூபாய் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை வேளாண்மை ஆணையரகத்தில் நேற்றுமுன்தினம் இரவுமுதல் அதிகாலை வரை நடத்திய சோதனையில் இந்த தொகை சிக்கியுள்ளது. சென்னை வேளாண்மை ஆணையரகத்தில் துணை இயக்குனராக பணியாற்றிவந்த சங்கர் என்பவர் வேளாண் அதிகாரிகளிடமும் உர நிறுவன முகவர்களிமும் மாதாமாதம் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் பேரில் நடந்த இந்த திடீர் சோதனையில் தஞ்சை மாவட்ட உதவி வேளாண்மை இயக்குனர் மற்றும் உர நிறுவன முகவர் இருவரிடம் இருந்தும் துணை இயக்குனர் சங்கரிடம் இருந்தும் மொத்தம் 3 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT