ADVERTISEMENT

கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் மீண்டும் ரெய்டு!  

03:13 PM Sep 20, 2019 | kalaimohan

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏற்கனவே கடந்த மாதம் 29 ஆம் தேதி காலை முதல் பல நாட்களாக கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகள், அந்த இரு நிறுவனங்களின் உரிமையாளர்களின் குடோன், வீடு, தாங்கும் விடுதி, தோட்டத்து வீடுகளில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 2.2 கோடி ரூபாயும், 56.60 கிலோ தங்கமும் வருமான வரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் காட்டப்படாத 93.56 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக மதுரையை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT