ADVERTISEMENT

ராகுல் காந்தி சென்னை வருகை 

03:20 PM Feb 28, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

திராவிட அரசியலில் தனது பங்களிப்பை உலகறிய செய்ய, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய 'உங்களில் ஒருவன் ' நூல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடக்கிறது. இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி இந்த நூலை வெளியிடுகிறார். துரைமுருகன் தலைமையிலும், டி.ஆர்.பாலுவின் முன்னிலையிலும் நடக்கும் இந்த விழாவில், ராகுல்காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, பீகாரின் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்தியராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். விழாவில் கலந்துகொள்ளும் தலைவர்கள், சான்றோர்கள், திமுக தலைவர்கள் அனைவரையும் வரவேற்கிறார் கனிமொழி எம்.பி.

இந்த நிலையில், நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்த ராகுல் காந்தியை டி.ஆர். பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் நேரில் சென்று வரவேற்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT