ADVERTISEMENT
சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் ஐஸ்ஹவுஸ் சிக்னல் அருகில் இன்று (25.03.2023) பொதுமக்கள் உரிமை விழிப்புணர்வு இயக்கம் மற்றும் ராணி மேரி கல்லூரியில் பயிலும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் சார்பாக பொதுமக்கள் நலன் கருதி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் சாலை விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளை ஏந்தி மனிதச் சங்கிலி வடிவிலான அணிவகுப்பும் நடத்தினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments