இந்தநிலையில்தான் எந்த ஒரு திட்டத்திலும் முதன்மையாக விளங்கும் புதுக்கோட்டை துப்புறவுப் பணியாளர்களின் மனதை படிப்பதிலும் முதன்மையாக செயல்பட்டிருக்கிறது. மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம். பணிக்கு வந்த சில நாட்களில் தனது பணியை சிறப்புடன் செய்யத் தொடங்கினார். தடைகள் பல கடந்தார். இப்போது ஆதரவாக சுகாதாரத்துறை இருப்பதால் தான் செய்ய நினைப்பதை செய்து கொண்டிருக்கிறார். மனநிலை பாதிக்கப்பட்டு கர்ப்பிணியாக்கப்பட்டு சாலை ஓரங்களில் கிடந்த இளம் பெண்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சையும், பிரசவமும் செய்து வந்தார். எந்த ஊரில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் யார் நின்றாலும் அவர்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சையும், அவர்களின் குடும்பத்தினருக்கு அறிவுரையும் வழங்கி அனுப்பி வைக்கிறார்.
மனநல வியாழன் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் தொடங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை விரிவு செய்து ஒவ்வொரு நாளும் ஒரு மருத்துவமனையில் ஆலோசனையும், சிகிச்சையும் வழங்கி வருகிறார். 104 அவசர அமைப்புகளுக்கு என்று தனி இலவச அழைப்பும் உருவாக்கப்பட்டுவிட்டது. இந்தநிலையில்தான் மாநிலத்திலேயே முதல்முறையாக புதுக்கோட்டை நகரை தூய்மையாக வைத்திருக்கும் துப்புறவுப் பணியாளர்கள் எந்த அளவு மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு ஏன் மனநல ஆலோசனைகள் வழங்க கூடாது என்று முடிவெடுத்து. நகராட்சி ஆணையர் சுப்பிரமணியனிடம் (பொ) இது பற்றி பேச.. அவரும் முகாம் நடத்தலாமே என்று சொன்னதால் 18 ந் தேதி பழைய மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட சுகாதரா இணை இயக்குநர் சந்திரசேகரன் தலைமையில் முகாம் தொடங்கியது.
அதில் 32 பேருக்கு மன அழுத்த பிரச்சனை இருப்பதும் 15 பேருக்கு கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பதும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு போதிய ஆலோசனைகளும், மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வாங்க வந்து உங்கள் குறைகளை மனம் விட்டு சொல்லுங்க அப்பறம் உங்களுக்கு மன அழுத்தம் இருக்காது என்று மருத்துவர் குழுவினர் சொன்ன போது.
அய்யா எங்களையும் மதிச்சு சிகிச்சை கொடுத்தீங்களே உங்க கூட ஒரு செல்பி எடுத்துக்கிறோம் என்று சொல்ல செல்பி எடுத்துக் கொண்டு விடை பெற்றார்கள். இதேபோல ஒவ்வொரு மாவட்டதிலும் துப்புறவுப்பணியாளர்களுக்கு சிறப்பு மனநல முகாம்கள் நடத்தி அவர்களின் மன அழுத்தம் குறைத்தால் சிறப்பாக இருக்கும்.