Skip to main content

வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் தாய் மனநல காப்பகத்தில் சேர்ப்பு!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020
incident in pudukottai

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் தாலுகா, ஏம்பல் கிராமத்தில் கடந்த மாதம் 30 ந் தேதி காணாமல்போன 7 வயது சிறுமி, மறுநாள் அதே பகுதியில் உள்ள கிழவி தம்மம் ஊரணியில் உடலெங்கும் காயங்களுடன் செடி கொடிகளுக்கு மத்தியில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் கொலையாளியை உடனே கைது செய்ய உத்தரவிட்டார். அடுத்த சில மணி நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த சாமிவேல் (எ) ராஜாவை  கைது செய்தனர்.

தொடர்ந்து முதலமைச்சர் நிவாரணம் அறிவிக்கப்பட்டதுடன், மாவட்ட நிர்வாக நிவாரணம் ஆகிய இரு நிவாரணங்களையும் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி வழங்கினார். இதனை தொடர்ந்து திமுக, காங்கிரஸ், தேமுதிக, உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் விஜய் ரசிகர்களும் நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்கள்.

 

incident in pudukottai

 

சிறுமியை இழந்து வாடும் குடும்பத்தினர் மனதளவில் பாதக்கப்படக்கூடாது என்பதற்காக மனநல ஆலோசனை வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார்.  அதன்பேரில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர். கார்த்திக் தெய்வநாயகம் தலைமையில், மனநல சமூகப்பணியாளர்கள் கனகராஜ், முருகானந்தம், அஞ்சலி தேவி, மேரி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் வீட்டிற்கு சென்று மனநல ஆலோசனைகள் வழங்கியதுடன் மருந்துகளும் வழங்கினார்கள். மேலும் சிகிச்சை தேவைப்படும்போது சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியை  நினைத்து, நினைத்து அவரது தாய் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த மருத்துவக் குழுவினர், சிறுமியின் தாய் மேலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சிகிச்சைக்காக 102 சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று அன்னவாசல் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மகளை பறிகொடுத்து மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள தாய்க்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவக்குழுவினர் கூறினார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.