ADVERTISEMENT

கேள்வி கேட்ட மாமியார்; ஆத்திரத்தில் கொலை செய்த மருமகள்

03:23 PM Mar 08, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் மலைக்குடிபட்டியில் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டியைச் சேர்ந்தவர் வேலு மனைவி பழனியம்மாள் (வயது 75). இவரது மருமகள் கனகு (வயது 42). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பழனியம்மாள் தனது மருமகள் கனகிடம் தேநீர் கேட்டுள்ளார். தேநீர் கொடுக்கும் போது ஏன் ஆறிப்போய் உள்ளது என்று கேட்டு மருமகளைத் திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மருமகள் கனகு அருகில் கிடந்த சைக்கிள் பழுது நீக்கும் இரும்பு கம்பியை எடுத்து பழனியம்மாள் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பழனியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து இலுப்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மருமகள் கனகுவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT