2010 ஆம் ஆண்டு 8 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவன் ரமேஷ். நீதிமன்றத்தால் 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அவன் கடந்த ஜீன் 3ந்தேதி சிறையில் இருந்து தப்பி சென்றுவிட்டான். இதுதொடர்பாக பாகாயம் காவல்நிலையத்தில் சிறைத்துறை சார்பில் புகார் தரப்பட்டது. அதன் அடிப்படையில் தப்பி ஓடிய குற்றவாளி ரமேஷை போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்து கைதி தப்பிப்போகும் அளவிற்கு அஜாக்கிரதையாக இருந்த வேலூர் மத்திய சிறை முதன்மை தலைமை காவலர் குமரவேல், தலைமை காவலர் திருமலை ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக சிறைதுறை டி.ஐ.ஐீ உத்தரவிட்டுள்ளார்.
Show comments