style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உத்தரபிரதேசத்தில் சிறைக்கைதிகளின்பொழுதுபோக்குக்காக எல்.இ.டி டி.விக்கள் வாங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் மத்திய சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகள் என மொத்தம் 70 சிறைகள் உள்ளது. அந்த சிறைகளில் கைதிகளாக 1.5 லட்சம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறை கைதிகள் மனசோர்வுற்று காணப்படுகின்றனர் இதன் காரணமாக கைதிகளின்பொழுது போக்கிற்காகவும் மனவசோர்வை நீக்கவும்900 எல்.இ.டி டி.விக்கள் வாங்கப்படும் என அறிவித்து அதற்காக3.5 கோடியையும்ஒதுக்கியுள்ளது.
இன்னும் சிலவாரங்களில் உத்தரபிரதேச சிறைகளில் எல்.இ.டி டி.விக்கள் பொருத்தப்படும் எனசிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சந்திரபிரகாஷ் தெரிவித்தார். அந்த தொலைக்காட்சிகளில் பயனுள்ள தகவல் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.