ADVERTISEMENT

கருவுற்ற சிறுமி! தந்தை உட்பட மூவர் மீது போக்சோ!  

03:11 PM Nov 26, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், மருதாண்டாகுறிச்சி, மேல பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (19) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

இதில் அச்சிறுமி கருவுற்றுள்ளார். இது இரு வீட்டாருக்கும் தெரியவர, பெற்றோர்கள் முன்னிலையில் அரவனுார் மாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அச்சிறுமி. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அச்சிறுமிக்குத் திருமண வயது வரவில்லை என்பதை அறிந்துள்ளனர். அதனால், இதுகுறித்து மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அத்தகவலின் பேரில் மருத்துவமனைக்குச் சென்ற ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார், அங்கு விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து முத்துக்குமார், அவரின் தந்தை முருகேஷன் (54), சிறுமியின் தந்தை ரஜினிகாந்த் (45) ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT