ADVERTISEMENT

“அம்மா ஓட்டு போடுங்கம்மா”- ஒரே வீட்டில் சந்தித்துக் கொண்ட பொன்முடி - செல்லூர் ராஜு

08:14 PM Feb 23, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

திமுக அமைச்சர்கள் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களும் ஈரோட்டில் முகாமிட்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எதேச்சையாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஓட்டு சேகரித்துக் கொண்டிருந்த வீட்டிற்குச் சென்ற தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வீட்டிலிருந்தவர்களை நோக்கி “அம்மா ஓட்டு போடுங்கம்மா” எனத் தெரிவித்தார். அப்பொழுது அமைச்சர் பொன்முடியும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் நலம் விசாரித்துக் கொண்டு பேசிக் கொண்டதோடு நகைச்சுவையாக செல்லூர் ராஜுவை அமைச்சர் பொன்முடி தட்டிக் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT