ADVERTISEMENT

ஜெயிக்கப் போவது பொன்முடியா? கே.என். நேருவா?

04:45 PM Mar 10, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் பாரிவேந்தர் கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாக சொல்லப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளருமான பொன்முடி தனது மகன் கௌதம சிகாமணியை கள்ளக்குறிச்சி தொகுதியில் நிறுத்த தீவிர முயற்சி எடுத்து வந்ததும், விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு ஒன்றிய செயலாளர்களை தனிப்பட்ட முறையில் பார்த்து தன் மகனுக்கு ஆதரவு திரட்ட முயற்சித்து வருகிறார். இதற்கு இடையில் பொன்முடி மகன் கள்ளக்குறிச்சியில் போட்டியிடுகிறார் என விளம்பரங்களும் வெளிவர துவங்கியுள்ள நிலையில் இதற்கு வலு சேர்க்கும் விதமாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள துரைமுருகன் இல்லத்திற்கு பொன்முடி தனது மகன் கவுதம சிகாமணியுடன் சந்தித்து உற்சாகமாகப்பேசிய திமுக பொருளாளர், பொன்முடியின் கைகளைப் பிடித்தபடி ‘என் மகனும், உன் மகனும் எம்.பியாக போவது உறுதி என நம்பிக்கையாக கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இப்படி பொன்முடி தன் மகனுக்காக பாரிவேந்தரை பெரம்பலூருக்கு தள்ளிவிட நினைக்கும் நிலையில் கே.என்.நேருவோ பெரம்பலூர் தொகுதியோ திருச்சியில் உள்ள லால்குடி, குளித்தலை, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் பெரம்பலூர் என திருச்சியில் உள்ள பாதி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. ஏற்கனவே நடிகர் நெப்போலியன் நின்று அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்த தொகுதி. இந்த முறையும் அதே போலதி.மு.க.விற்கு கொடுத்தால் கட்டாயம் ஜெயித்து விடலாம் என ஜெயிக்கிற கணக்கை சொல்லியிருக்கிறார்.

பாரிவேந்தர் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் என இரண்டில் ஒரு தொகுதி கேட்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ரவி, “எங்களுக்கு விருப்பமான தொகுதி கள்ளக்குறிச்சிதான் அதைக் கேட்டிருக்கிறோம். விரைவில் முடிவு செய்வோம் என்று சொல்லியிருந்தார்.

இந்நிலையில், பாரிவேந்தர் கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர் பாரிவேந்தரின் ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர். இதற்காக போஸ்டர், பேனர் என அனைத்து வேலைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த முறை பெரம்பலூரில் கோடிக்கணக்கில் செலவு செய்து அதிமுக மருதை ராஜிடம் தோற்றதால், இந்த முறை திமுக வாக்கு வங்கியோடு, கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என முடிவு செய்து தொகுதி முழுவதும் பாரிவேந்தர் வேலையில் இறங்கினார். ஸ்டாலினிடம் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்து நாங்கள் முழுபலத்துடன் பண பலம், ஆட்கள் பலத்தை இறக்குகிறேன் என உறுதி கொடுத்ததால் ஸ்டாலினும் பாரிவேந்தருக்கு ஓகே சொல்லி இருப்பதாக தகவல்.

அதே நேரத்தில் பொன்முடி தன் மகனுக்காக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து கள்ளக்குறிச்சியை வாங்கினால் பெரம்பலூர் பாரிவேந்தருக்கு கிடைத்தால் திருச்சியில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. கட்சி தலைமை நெருக்கடி கொடுக்கிறது. ஆனால் கே.என்.நேரு தரப்போ ஏற்கனவே திருச்சியில் கடந்த முறை தி.மு.க. போட்டியிட்ட மாநகர செயலாளர் அன்பழகன் செலவுக்கு பணம் இல்லாமல் தற்போது கடனாளியானார். மீண்டும் இந்த முறையும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது என்றும், அதுவும் இல்லாமல் தாராளமாக பணம் செலவு பண்ணக்கூடிய தி.மு.க. வேட்பாளர் இல்லை என்பதாலும், இந்த தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கி கொடுங்கள். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பியுமான அடைக்கலராஜ் மகன் லூயிஸ் அடைக்கலராஜ்க்கு கொடுத்தால் பணம், செல்வாக்கு தாராளமாக இருப்பதால் ஈசியா ஜெயித்து விடலாம் என தலைமைக்கு தகவல் சொல்லியிருக்கிறார்.

பொன்முடி தன் மகன் நிற்க வேண்டும் என்பதற்காக பாரிவேந்தரை பெரம்பலூருக்கு தள்ளிவிடவும், கட்டாயம் திருச்சி தி.மு.க. விற்காக தள்ளிவிட தலைமை முயற்சிப்பது தான் தற்போது அரசியலில் பரபரப்பாக இருக்கிறது.

ஜெயிக்கப் போவது பொன்முடியா ? கே.என். நேருவா? என்கிற விவாதம் கட்சியின் மேல் மட்டங்களில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT