pn

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியனுக்கு நேற்று அதிகாலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கு பிறகு மதியம் இயல்பான நிலைக்கு வந்தார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜீவ்காந்தி மருத்துவனை சென்று தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்தார். உடன் பொன்முடி, சேகர்பாபு சென்றனர்.