இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சி, டி பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3000 ரூபாய் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் மிகை ஊதியம் வழங்கப்படும் எனவும், 2022-23 ஆண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் பணிபுரிந்த முழு நேர, பகுதி நேர பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சி, டி பிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்களுக்கும் 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.