பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் 17- ஆம் தேதி வரை விடுமுறை என்பதால் கூட்டுறவு வங்கிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கிகளுக்கு இணைப்பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ADVERTISEMENT
அதில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உட்பட அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் அபாய மணி ஒலிப்பான், சிசிடிவி கேமராக்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் இரவு பணியிலுள்ள காவலர்களின் விவரம் குறித்த பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments