தொடர்ந்து பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் கவிபாலன் தலைமையில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. தண்ணீர் அமைப்பின் செயலர் பேரா.கி. சதீஷ்குமார் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் பறையாட்டம், சிலம்பம், சுருள்வாள், கும்மியாட்டம் நடைபெற்றது. ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்று கும்மியாட்டம் ஆடினார்கள். மற்றும் நிகழ்வில் மண்ணைக் காத்திட உயிர்ம நேயம் போற்றிட மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
‘பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பை எடுப்போம்’ எனும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சூழலைச் சிதைக்கும் நெகிழியைத் தவிர்ப்போம். மண்வளம் காத்திட மஞ்சப்பை எடுப்போம் என்பதை வலியுறுத்தி, பொங்கல் விழாவை முன்னிட்டு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து சக்கரைப் பொங்கல், பொங்கல், காய் கூட்டுகள் உடன் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவிற்கு திருச்சி மாவட்ட தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பால் குணா, அருண், பெற்றோர் ஆசிரியர்களின் சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.