ADVERTISEMENT
ADVERTISEMENT
புனித அருளானந்தர் ஆலய தேரை, ஸ்ரீ சொர்ண காளீஸ்வரர் கோயில் வழியாகக் கொண்டு செல்ல அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (12/02/2022) விசாரணை வந்தபோது நீதிபதி, அரசியல் மற்றும் மதம் சார்ந்த ஊர்வலங்களுக்கு அனுமதி தருவதற்கு புதிய விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். அதேபோல், அசம்பாவிதம் நிகழ்ந்தால் இழப்பீடு வழங்க முன்கூட்டியே டெபாசிட் கொண்டு வரும் முறையைக் கொண்டு வரலாம் என கருத்து தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
ADVERTISEMENT
Show comments