தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்ய இருப்பதாக மர்ம நபர் ஒருவர் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த நிலையில் அந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தொலைபேசியில் கொலை மிரட்டல் விட்ட அந்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது திண்டுக்கல்லில் இருந்து அந்த தொலைபேசி அழைப்பு வந்ததாக தெரியவந்தது.
சென்னை காவல் துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பொழுது மிரட்டல் விடுத்த நபர் வத்தலகுண்டு அடுத்த விராலிப்பட்டியை சேர்ந்த குருசங்கர் என தெரியவந்துள்ளது.
மிரட்டல் விடுத்த குரு சங்கரை திண்டுக்கல் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ADVERTISEMENT
Show comments