இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் பங்கேற்காததால், அவர்களை வைத்து தமிழ்நாடு முழுக்க பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் அனைத்துப் பேருந்துகளும் இயங்க, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பில், உரிய பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள், நடத்துநர் உரிமம் பெற்றவர்கள், உரிய ஆவணங்களுடன் மாவட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகளை தற்காலிக ஊழியர்கள் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அசல் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில், சென்னை எம்.டி.சி., எஸ்.இ.டி.சி, உள்ளிட்ட எட்டு போக்குவரத்துக் கழகம் மூலம் பணிக்கு வராதவர்களின் பட்டியல் சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது.