ADVERTISEMENT
இதையடுத்து சிறுமியை விடுவித்த அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஆனால், இந்த விவரம் தெரியாத பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமி பூப்பெய்துவிட்டதாக நினைத்து தொடர்புடைய சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். பின்னர் சிறுமியின் உடலில் நக கீறல்கள் இருந்ததையடுத்து அவரிடம் விசாரித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.
ADVERTISEMENT
இதனைத் தொடர்ந்து பெற்றோர் போலீஸில் புகார் செய்ததுடன் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் சிறுமியை பாலியல் தொல்லை செய்தது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக திருவரங்கம் மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து சிறுமியை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய நபரைத் தேடி வருகின்றனர்.
Show comments