ADVERTISEMENT

"ப்ளீஸ் ஒரு சிகரெட் கொடுங்க...போலீசிடம் கெஞ்சிய இளம்பெண்..!"

11:45 AM Aug 16, 2019 | kalaimohan

வழிப்பறித் திருட்டில் ஈடுபட்ட பல கொள்ளையர்கள் பலரை பிடிக்கும் போலீஸார், அவ்வப்போது மக்களின் கவனத்தை திசை திருப்பி பிக் பாக்கெட் அடிக்கும் பெண்களையும் மடக்கி சிறையில் தள்ளுவது வாடிக்கை. இப்போது, சென்னை தேனாம்பேட்டை போலீஸார் ஸ்வாதி என்ற இளம்பெண்ணையும், அவனது காதலன் ராஜூவையும் வழிப்பறித் திருட்டில் கைது செய்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கைப்பையை பறிக்கும் காட்சிகள் சிசிடிவியில் தெளிவாக பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் மகளிர் போலீஸார் நடத்திய விசாரணையில் வெளிவந்த அத்தனையும் அதிர்ச்சி ரகம்.

"அரியலூரை சேர்ந்த அந்த பெண், சென்னை தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த அவர், இப்போது காதலனுடன் சூளைமேட்டில் வீடு எடுத்து தங்கி உள்ளார். மது, கஞ்சாவுக்கு அடிமையான அவர், இப்போதே காதலனுடன் தனிக்குடித்தனம் வரை வந்துவிட்டார். அதுவும் ராஜா 2-வது ஆளாம். இதற்கு முன்னாடி ஒருவரோடு தொடர்பில் இருந்தாராம். அவர் பாதியிலேயே விட்டுட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு ராஜாவுடன் சேர்ந்து கொண்டார் சுவாதி.

உல்லாசமாக ஊர் சுத்தவும் கஞ்சா இழுக்கவும் காசுவேணுமே.. அதுக்காகத் தான் திருட்டில் ஈடுபட்டோம் என்றுவிசாரணையில் கூறியுள்ளார் சுவாதி.

மேலும் பெண் காவல் அதிகாரி கூறுகையில், பெற்றோர்கள் நம்ம புள்ள நல்லா படிக்கட்டும்னு பட்டினத்திற்கு அனுப்பி வச்சா, இந்த புள்ள இப்படி கண்டமேனிக்கு சுத்துது. இதுல என்கிட்டேயே மேடம் எனக்கு ஒரு சிகரெட் வாங்கி கொடுங்க பிளீஸ்னு கெஞ்சுது. அந்த அளவுக்கு போதைக்கு அடிக்ட் ஆயிடுச்சு " என நம்மிடம் விவரித்தார்.

பெண் பிள்ளைகளை பெற்றவங்களே கொஞ்சம் கவனமா இருங்க.. அதுவும் பட்டிணத்திற்கு படிக்க அனுப்பி வைத்தால் மிகவும் கவனமாக இருங்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT