Skip to main content

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 21வயது பட்டதாரி பெண் நடத்திய கூட்டுக் கொள்ளை... கிருஷ்ணகிரியில் பரபரப்பு!!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

 21-year-old graduate girl robbed for want of luxury life

 

கிருஷ்ணகிரியில் 21 வயது பட்டதாரி மாணவி தலைமையில் கூட்டுக் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் வேலு நகர் குடியிருப்பைச் சேர்ந்த  தம்பதியினர் பார்த்திபன் ஷர்மிளா. இவர்கள் குடியிருந்த வீட்டிற்கு அருகில் வசித்துவந்த பூமிகா என்னும் 21 வயது பட்டதாரி பெண், சர்மிளாவுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி பார்த்திபன் வேலை காரணமாக வெளியூர் செல்ல, சர்மிளா உடன் பூமிகா பேசிக் கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்கு வந்து சர்மிளா மற்றும் பூமிகா ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த நகைகளை பறித்துச் சென்றனர். பூமிகாவின் கம்மலையும் பறித்துச் சென்றது அந்த கொள்ளை கும்பல்.

 

 21-year-old graduate girl robbed for want of luxury life


கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு 3 லட்சம் எனக் கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து சிப்காட் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் இதுதொடர்பாக, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளையும் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அந்த இடத்தில் இருந்த பட்டதாரி பெண்ணான பூமிகாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது பூமிகாவின் வாக்குமூலங்கள் காவல் துறையினருக்குச் சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் பின்பு பூமிகாவை அவர்கள் பாணியில் விசாரித்த பொழுது இந்த கொள்ளை சம்பவத்தை தலைமையேற்று அரங்கேற்றியதே பூமிகாதான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அதோடு மட்டுமல்லாமல் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளில் பூமிகா தெருவின் ஒரு பகுதியில் ஐந்து நபர்களுடன் நின்று கொள்ளை நடந்த அன்று பேசிக் கொண்டிருந்ததும் தெரிந்தது.

 

 21-year-old graduate girl robbed for want of luxury life


அதன் பின்தான் அடுக்கடுக்கான உண்மைகள் அவரிடம் விசாரித்ததில் வெளிவந்தது, கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்த பட்டதாரி மாணவி பூமிகா சொகுசாக வாழ ஆசைப்பட்டு ஃபேஸ்புக் நண்பர்களிடம் பக்கத்து வீட்டில் உள்ள நகையைக் கொள்ளையடிக்க திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டு சர்மிளா என்பவரிடம் அடிக்கடி சென்று நட்பாக பழகி வந்து அவரிடம் உள்ள நகைகள் குறித்தும் முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொண்டு கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.

பெங்களூரில் உள்ள தனது ஃபேஸ்புக் நண்பர் பிரசாந்த்திடம் இதைப்பற்றி கூறி கொள்ளையடிக்க தேதியும் குறித்த பூமிகா. கொள்ளை நடந்த நாளன்று சர்மிளாவின் வீட்டிற்கு துணிதைக்க செல்வதுபோல் சென்று பேசியுள்ளார். அப்பொழுது திட்டமிட்டபடி அந்த கும்பல் வீட்டிற்கு வந்து சர்மிளாவிடமிருந்து நகையைப் பறித்தது. சந்தேகம் வராமலிருக்க பூமிகாவிடமும் கம்மலையும் பறித்துச் சென்றனர்.

 

Ad


இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பூமிகா, பிரசாந்த், புட்டராஜு. சஞ்சய், கிரண், நாகராஜ், என ஆறு பேரையும் சிப்காட் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். படித்த பட்டதாரி இளம்பெண் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீட்டுக்கு அருகில் நட்பு முறையில் பழகிவந்த பெண்ணிடமே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.